Showing posts with label படித்து ரசித்த கவிதைகள்... Show all posts
Showing posts with label படித்து ரசித்த கவிதைகள்... Show all posts

Wednesday, October 1, 2008

சமீபத்தில் படித்து ரசித்த கவிதைகள் ..........

உன் பிறந்தநாளன்று மட்டும்,

என் டைரி வெறுமையாய்

இருப்பது பார்த்து கோபிக்கிறாய்.

அது டைரியில் குறிக்க

வேண்டிய நாளில்லையடிஎன்

உயிரில் பொறிக்க வேண்டிய நாள்!

____________________________________

உன் பிறந்தநாளன்று முதலாளாய் 12

மணிக்கே

வாழ்த்தவில்லையென சண்டைக்கு வருகிறாய்

நீ பிறந்த நேரத்தில் வாழ்த்துவதற்காய் நான் காத்திருந்ததை

எப்படி சொல்லிப் புரிய வைப்பது?

____________________________________

ஒருநாளுக்காக ஓராண்டு காத்திருக்க முடியவில்லையடி.

உன் பிறந்தநாளை மாதம்தோறும்

இல்லையில்லை,நீ பிறந்தகிழமையென்று

வாரம் தோறும் கொண்டாடுவோமா?

____________________________________

நீ பிறந்த மருத்துவஅறைக்கு ராசிகூடிவிட்டதாம்.

அழகுக்குழந்தை பிறக்க அங்குதான்

பிரசவம் பார்க்கவேண்டுமென

அடம்பிடிக்கிறார்களாம் கர்ப்பிணி பெண்கள்.

____________________________________

உன் பெயரில் நடக்கும்

பிறந்தநாள் அர்ச்சனையை ஏற்றுக்கொள்ள

தவம் கிடக்கின்றன

எல்லாத் தெய்வங்களும்!

____________________________________

பிறக்கும்போது 3 கிலோ இருந்தாயாம்.

பத்து மாதமாய் உன் அம்மாவால்,

3 கிலோ அழகுதான் சேர்க்க முடிந்ததா?

____________________________________

உன் பிறந்த நாளை

தேவதைகள் தினமாய்க் கொண்டாட

தேவதைகளே தீர்மானித்திருப்பது

உனக்குத் தெரியுமா?

____________________________________

மழைக் காலம், கார்காலமெல்லாம்,

எந்த மாதமென்று எனக்குத் தெரியாது

நீ பிறந்த மாதம் அழகுக்காலம்!

____________________________________

கால எந்திரம் கிடைத்தால் நீ பிறந்தபொழுது,

நான் என்ன செய்து கொண்டிருந்தேன்?

எனப் பார்க்க ஆசை!

____________________________________

பிறந்தநாளை எப்போதும்

ஆங்கிலத் தேதியில் கொண்டாடுகிறாய்

என்ன பாவம் செய்தது, தமிழ் தேதி?

____________________________________

தன் சாதனைப் பட்டியலில்

உன் பிறப்பை முதன்மையாய்க்

குறித்து வைத்திருப்பான் பிரம்மன்!

____________________________________

பிறந்தநாளுக்கு

எத்தனை ஆடைகள் நீ எடுத்தாலும்

உன் ‘பிறந்தநாள் ஆடை’? போல் வருமா?

____________________________________

ஒருமுறைதான் பிறந்தாய்

உன்னைப் பார்க்கும்

ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன்!

____________________________________

நீ பிறந்த பிறகுதான்

உன் அப்பாவுக்கே பெயர் வைத்தார்களா?

அழகப்பன் என்று!

____________________________________

உன் பிறந்த நாளன்று

உன்னை வாழ்த்துவதா?

நீ பிறந்த நாளை வாழ்த்துவதா?

____________________________________

ஒவ்வொரு பிறந்த நாளிலும்

வயதோடு, அழகையும்

ஏற்றிக் கொள்கிறாய்!

____________________________________

உன் பிறப்பு

உன் தாய்க்குத் தாய்மையையும்,

எனக்கு வாழ்வையும் தந்தது!

____________________________________

நீ பிறந்தாய்…

பூமிக்கு இரண்டாம் நிலவு

கண்டுபிடிக்கப் பட்டது!

____________________________________

உன் பிறப்பில் தான்

கண்டுகொண்டேன்

கவிதைக்கும் உயிருண்டென!

____________________________________

என் காதல் தேசத்தில்

உன் பிறந்த நாள்

தேசிய விடுமுறை.

____________________________________

அழுகையோடு பிறந்தாயா?

அழகோடு பிறந்தாயா?....

____________________________________

("...............................")

____________________________________

( உன் வயதுக்கு ஒரு கவிதை கேட்டாய். ஒன்றே ஒன்று குறைகிறதடி. சரி உன் பெயரெழுதி நிரப்பிக்கொள்!)