Saturday, July 19, 2008

நீ
உன் தோழிகளோடு
கைப் பந்து
ஆடுவதுதான்
எனக்குத்
திருவிளையாடல்.

******************

அற்புதமான காதலை
மட்டுமல்ல 
அதை உன்னிடம்
சொல்ல முடியாத 
அதி அற்புதமான
மௌனத்தையும் 
நீதான் எனக்குத்
தந்தாய். 

****************** 

அன்று 

நீ குடை
விரித்ததற்காகக்
கோபித்துக் கொண்டு 
நின்றுவிட்ட 
மழையைப்
பார்த்தவனாகையால் 

இன்று 

சட்டென்று மழை
நின்றால்
நீ எங்கோ குடை
விரிப்பதாகவே 
நினைத்துக் 
கொள்கிறேன்.

No comments: