Saturday, July 19, 2008

புத்தர் இந்த உலகத்தில் தோன்றி
ஒரு மார்க்கத்தைத்தான்
அமைத்துக் கொடுத்தார்.
நீயோ என் எதிரில் தோன்றி
எனக்கொரு உலகத்தையே
அமைத்துக் கொடுத்துவிட்டாய் 

*****************************

உன்னை எப்படித்தான் உன் வீடு தாங்குகிறது?
நீ சிரிக்கும்போது என்ன செய்யும் உன் வீடு?
நீ குளிக்கும்போது என்ன செய்யும் உன் வீடு?
அதைவிட
நீ தூங்கும்போது என்னதான் செய்யும் உன் வீடு? 

***************************** 

என் மனதைக் கொத்தி கொத்தி
கூடு கட்டி
குடியும் ஏறிவிட்ட
மனங்கொத்திப் பறவை நீ 

*****************************

கடவுள் குடியிருக்கக் கோயிலாகக்கூட
இருந்துவிட முடியும்!
ஆனால்,
நீ குடியிருக்க வீடாக இருப்பது
முடியவே முடியாது என்பதை
நிரூபித்துக்கொண்டே இருக்கிறது |
நீ குடியிருக்கும்
என் இதயம்! 

***************************** 

நீ உன் முகத்தில்
வந்து விழும் முடிகளை
ஒதுக்கி விடும் போதெல்லாம்
உன் அழகு முகத்தை
ஆசையோடு பார்க்க வந்த முடிகளை
ஒதுக்காதே என்று
தடுக்க நினைப்பேன்.
ஆனால் நீ முடிகளை ஒதுக்கிவிடுகிற
அழகைப் பார்த்ததும்
சிலையாக நின்று விடுகிறேன். 

*****************************

காதல்தான்
நான் செய்யும் தவம்.
என் கடுந்தவத்தைக் கலைத்து
என்ன வரம் வேண்டும் என்று
எந்தத் தெய்வமும்
என்னைக் கேட்காமலிருக்கட்டும். 

***************************** 

நான் எப்போது
உன்னை நினைக்க ஆரம்பித்தேனோ
அப்போதே
என்னை மறந்து விட்டேன்.
அதனால்தான் என் காதலை
உன்னிடம் சொல்லவேண்டும் என்கிற
ஞாபகம் கூட எனக்கு வரவில்லை. 

*****************************

என் தவத்தைவிடச்
சிறந்ததாய்
எந்த வரத்தையும்
எந்தத் தெய்வத்தாலும்
தந்துவிட முடியாது

No comments: