Monday, August 11, 2008

சுஜாதா ரசித்த கவிதை

ஆடைகளில் சுருக்கம் விழாமல்,உதடுகளின் சாயம்உருகி வழியாமல்,அலங்காரப் பதுமையாய்வரவேற்பறையில் நான்.
தொலைபேசிச் சத்தம்கேட்டுக் கேட்டு என்காது மடல்கள் ஊமையாகிவிட்டன
போலியாய் சிரிப்பதற்காகவேஎனக்குஊதிய உயர்வுஅவ்வப்போது வருகிறது.
கண்களில் கொஞ்சம்காமம் கலந்தேபாதி கண்கள் என்னைப் பார்க்கின்றன.மீதி கண்கள்அவசர யுகத்தின் பிரதிநிதிகள்கடிகாரம் மட்டுமே பார்த்து வாழ்பவர்கள்.
என் குரலுக்குள்குயில் இருக்கிறதாம் !எனக்கு இருப்பவை தோகைகளாம் !வர்ணனை வார்த்தைகளிலும்புன்னகை மட்டுமே பூக்க வேண்டுமென்னும்கட்டாயக் கட்டுகளில் நான்.
எனது சின்ன வயது மகள்மாலையில் மறக்காமல்மல்லிகை வாங்கி வரச் சொன்னாள்.
பூக்களின் வாசனைகளுக்கிடையேஎன்சராசரி வாழ்க்கையின் எதார்த்தம்நாசி யை எட்டும் போதுமுந்திக் கொண்டு தட்டுகிறதுமீண்டும் அந்த தொலைபேசி.
விரைவாய் மதிய உணவு முடித்துகிடைக்கும் இடைவேளையில்சிறிதே இளைப்பாறிமீண்டும் உதடுகளில் புன்னகை நட்டுமுன்னறை வாசலில் தஞ்சம்.
அமிலச் சாலையில் கழுவப்பட்டுமொத்த மனசும்சாயம் போனதாய்த் தோன்றும்,ஒவ்வொருமாலைப் பொழுதுகளிலும்.
சிரித்து வாழவேண்டும் என்றுகவிஞன் சொன்னது என்னிடம் தானோ ?சிந்தனைகள் விட்டு விட்டுவட்டமிடகவலையாய் இருக்கிறது இப்போது.
மூன்று மணிக்கு பேசுகிறேன்காலையில் கண்வலியுடன்கணவன் சொன்னான்.கடிகாரம் இலக்கைத் தொட்டபின்னும்பயணத்தைத் தொடர,இதுவரை ஒலித்த தொலைபேசிஇப்போது மட்டும் ஊமையாய் !

No comments: