Sunday, February 22, 2009

தபு ஷங்கரின் ...இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் ..காதல் பிறந்து இருக்கிறது ..

ஒருவேளை இவன் நம்மைக் காதலிக்கிறானோ
என்று
நீ எப்போதாவது
நினைத்திருந்தால்
அந்த நினைப்புக்கு
இந்த நூல் சமர்ப்பணம் ...

_________________________________________



நீ வந்துவிடாதே
இந்த வேதனையை அனுபவிக்க விடு
இதுவும் சுகமாய்தான்
இருக்கிறது ...


_________________________________________


நீ எனக்கில்லை என்றாலும்
என்னிடம் இருப்பதெல்லாம்
நீதான்


________________________________________


மழையில் நனைந்த குழந்தையினை
தன் முந்தானையால் துடைத்துவிடும்
ஒரு தாயை
மழையில் நனைந்த படியே
பார்த்துக்கொண்டிருக்கும்
ஒரு தாயில்லா சிறுவனைப் போல
கடற்கரையிலும் பூங்காக்கிலும்
இணை இணையாய் அமர்ந்திருக்கும்
காதலிகளை பார்த்தபடி
தன்னந்தனியே நிற்கிறது
ஏன் காதல் ....


________________________________________




நீ என்னை விட்டு
எவ்வளவு தொலைவில் இருக்கிறாயோ
அவ்வளவு தொலைவிற்கும்
காதல் என்னைச் சூழ்ந்திருக்கிறது


___________________________________________


சின்ன மீன்களை
பெரிய மீன்கள் தின்றுவிடுவது மாதிரி
ஏன் கண்களைத் தின்றுவிடும்
உன் கண்களே போற்றி



__________________________________________



பாம்பாட்டி
பெட்டியைத் திறந்ததும்
படம் எடுக்கும் பாம்பு மாதிரி
என்னை பார்த்தும்
படம் எடுக்கும்
உன் பேரழகே போற்றி



_____________________________________________




ஒரு முற்றுப்
புள்ளியையே
கவிதையாக்கிவிடும்
உன் நெற்றியே போற்றி...




_______________________________________________




உன்னை வரைவதற்க்கான
கேன்வாசை தேவதைகள்
செய்துகொண்டிருக்கிறார்கள்
தூரிகையை
அண்ணன்கள் உதிர்த்து
அன்னங்களே சேகரிக்கின்றன
ஆனால்
உனக்கான வண்ணம்தான்
கடவுளிடம் கூட இல்லை
அதை
நீயே கொடுத்தால்தான் உண்டு ...



________________________________________




எனக்கெல்லாம்
காதல் வருமா என்று
நினைத்துகொண்டிருந்தேன்
" உனக்குத்தானடா வரவேண்டும்
என்பதைப்போல
நீ கொடுத்துவிட்டுப் போய்விட்டாய்
காதலை "..




_________________________________________




உங்கள் வீட்டு முன்பிருக்கும்
சிமெண்ட் மேடையில்
மின்சாரம் போன இரவில் நீ
அமர்ந்திருப்பதை பார்க்கும் போதெல்லாம்
கோயிலுக்குள் இருக்கும் மீனாட்சி அம்மன்
காற்று வாங்குவதற்காக
வெளியே வந்து
கோபுரத்தின் மேல்
அமர்ந்திருப்பதை போலவே
தோன்றும் எனக்கு ...



_____________________________________________

No comments: