Saturday, July 19, 2008

செல்வேந்திரன் .......முடியலத்துவம்

காதலி வடை போன்றவள் 
எந்நேரமும் காகம் வந்து 
கவர்ந்து விடலாம் !
வந்தது குறுஞ்செய்தி ........
சிரித்துவிட்டு வடையை தேடினால் 
காணோம் மச்சான் ........



யாருமே ஒலியுடன் பார்ப்பதில்லை 
என்றாலும்
பின்னணி இசை இல்லாமல் 
வருவதில்லை ........
நீலப்படங்கள்


மரபணு சோதனையில்
மரித்த எலிகளுக்கான
மவுன அஞ்சலி கூட்டத்தில்
விஞ்ஞானிகளுக்கு மத்தியில்
ஒரு பருத்த பூனையும் இருந்தது.

யுவான்சுவாங்
வந்துபோனது
எல்லாருக்கும் தெரிகிறது
பாவம்
பாட்டன் பெயர்தான்
பலருக்குத் தெரிவதில்லை
அவளும் அவளும்
ஆக்ரோஷமாய்
திட்டிக்கொள்கின்றனர்
"விபச்சாரியென்று"
அடடா...
இத்தனைநாள்
எதிர்வீட்டில் இருந்தும்
எனக்கிது தெரியவில்லையே...

எப்பொருள்
யார் யார்கை
இருப்பினும்
அப்பொருள் அடிப்பவன்
பக்கிரி!


நாளைய காட்சிக்கான
வசனங்களை எழுதலாம்;
புதியதாய் வேண்டுமாம்
புரொடியூசருக்கு...
வசனங்கள் கூடவா?!

சாவகாசங்கள்
எறியூட்டப்பட்ட
எழுத்தாளனொருவன்
எழுதிக்குவிக்கையில்
தற்செயலாய்
பிறந்துவிடுகிறது
கவிதை!

ஆறே வாரத்தில்
கிடைத்துவிட்டது
சிகப்பழகு
இனி
நாய்கள் நக்க வரும்...



சாண் ஏறினால்
முழம் சறுக்குகிறதா?
சங்கடப்படாமல்
லிப்டை பயன்படுத்து



அந்த நீங்கள்
யாரென்று கேட்கிறாய்
நீங்களின் பட்டியல்
நீளமானது
நீங்களுக்குள் நீயும்
இருக்கிறாயென்றால்
நீளும் உன் நாவிற்கு பயந்து சொல்கிறேன்
அந்த நீங்களுள் நீ இல்லையென்று...



சட்டம்
தன் கடமையைச்
செய்கையில்
குறுக்கே நிற்காதே!
உட்கார்ந்து கொள்.





செய்
அல்லது
செய்யச் சொல்லிவிட்டு
செத்து மடி



சுத்த தமிழ் பேசுங்களென
முழங்கினார்.
சுத்தமென்பதே
தமிழில்லை




இடைப்பட
குறுகுறு நடந்து
இட்டும் தொட்டும்
சிறுகை நீட்டி
கேட்கிறதக் குழந்தை
பிச்சை



அண்ணல்
கைவைக்க
அவளும்
இடம் கொடுக்க
நடு பஸ்ஸில்
நிகழ்கிறதொரு
நாய்க்காதல்!



மரபணு சோதனையில்
மரித்த எலிகளுக்கான
மவுன அஞ்சலி கூட்டத்தில்
விஞ்ஞானிகளுக்கு மத்தியில்
ஒரு பருத்த பூனையும் இருந்தது.



டோராவைக்
காண்பித்து
அழுகையை
நிறுத்துகிறோம்
சோறூட்டுகிறோம்
ஆட வைக்கிறோம்
பின் குழந்தைகள்
டோராவிடம் மட்டுமே
பேச துவங்குகின்றன...

காற்றின் வழி
நூகர்ந்து விட்ட
குருட்டு பாடகனின்
பாடலுக்கு
ஈயும் பணம்
பிச்சையல்ல...

மணியடித்த பின்னும்
தேர்வெழுதுபவர்கள்
படிப்பாளிகளென
அர்த்தம் கொள்ளப்படுகிறார்கள்
நிரூபிப்பதற்கான

வாய்ப்பு
ஒருபோதும்
கிடைக்காது
நீங்கள் ஒரு
நிரபராதியெனில்!

எழுத்தென்னும்
பெருநோயின்
அறிகுறி
கவிதை!

சாணி
கிடைக்காதிருக்கட்டும்
கொள்ளையழகோடு
சிரிக்கிறது
பூசணிப்பூ

ஆசைகளைக்
கொன்று
கனவுகளைப்
புதைத்து
நரகத்தை
சிருஷ்டிக்க
காதலி
அல்லது
காதலிக்கப்படு

எப்போதோ
பேச
துவங்கி விட்டோம்
நீயும் நானும்
இன்னும்
பேசத்தான்
பழகவில்லை

நல்ல எழுத்துக்கு
நல்ல வாசிப்பு
அவசியம்
பிறகெப்படி
காப்பியடிப்பது?

கடைசி பக்கம்
கிழிந்துவிட்ட
நாவலுக்கு
ஒருவர் மட்டுமா
ஆசிரியர்?!

சப்பென்று
இருக்கிறதுன்
கவிதைகள் என்கிறாய்
படிக்க சொன்னால்
நக்கியா பார்ப்பது?!



'எங்களுக்குள் இருப்பது
வெறும் நட்புதான்' என்றவர்களில்
25% பேரை
காவல் நிலையத்திலும்
25% பேரை
ரிஜிஸ்டர் அலுவலகத்திலும்
25% பேரை
குடும்ப நல நீதிமன்றங்களிலும்
25% பேரை
தண்டவாளங்களில்
சதை துணுக்குகளாகவும்
பார்த்தேன்.
மீதம் இருந்தவர்களுக்குள்
இருந்தது நட்பு மட்டும்தான்...



வேண்டியவர்களைக் காட்டிலும்
வேண்டாதவர்களின் எண்களே
தேவையாயிருக்கிறது.
அழைத்தால்
எடுக்காமலிருக்க...



நாக்கை நுழையாதிருங்கள்...
அத்தனைப் பக்கங்களையும்
புரட்டியாகி விட்டது
அலுவலக அரசியலில்
தப்பிப்பது குறித்தோ
குடிப்பது குறித்தோ
சாலைகளைக்
கடப்பது குறித்தோ
யாதொரு குறிப்பும்
இல்லாத இந்த
புத்தகத்தை வைத்து
என்னதான் செய்வது?!

அடுத்தவன் விஷயத்தில்
மூக்கை வேண்டுமானால்
நுழைத்துக்கொள்ளுங்கள்



கதைகள்
வாழ்க்கையிலிருந்தே
சுரண்டப்படுகிறதென
சாகும் வரை சொல்லிக்கொண்டிருந்த
கிழட்டு எழுத்தாளனொருவனை
பிணவறையில் சந்தித்தேன்
அவன் நகக்கண்களில்
சுரண்டிய கதைகள்
தேங்கி இருந்தது.
முட்டாப்பய
ஒழுங்கா கைகழுவுனா என்னடே?!


பக்கா முடியலத்துவம்
வேண்டுமென வந்தவளிடம்
எத்தனை பக்காவென? வினவினேன்
முழித்த முழி
மூணு பக்கா தேறும்.




மைதானத்தில்
வாய்பிளந்து கிடக்கும்
ரப்பர் பந்துகளுக்குள்
தேங்கி நிற்கும் மழைநீருக்கும்
மைதுனத்தை தாங்கி நிற்கும்
நிறம் மங்கிய நிரோத்திற்கும்
தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது
எவனாவது கோட்டிக்காரன்
கையில் கம்ப்யூட்டர்
சிக்குகையில்...




ரமேஷ்
என்றைக்காவது
செத்துவிடுவான்
என்பதை விட
இன்றைக்கு அவன்
சாகவில்லை என்பதில்
எத்தனை ஆறுதல்?!
போடலாம் என்றுதான்
போகிறார்கள்
போட்டுக்கொண்டிருந்ததால்
போட்டுத்தள்ளிவிடுகிறார்கள்
வந்தே மாதரம்.




அந்நியர்கள் உள்ளே பிரவேசிக்ககூடாது
என்னை உன்னிலிருந்து
அந்நியப்படுத்தியது எது?
இந்தக்கதவும் அறிவிப்பும் தானே



திப்பு கிழித்தெறிந்த வேங்கையின்
பேரப்புலி ஒன்று
இன்னும் வெறிகொண்டு திரிகிறது
வஞ்சம் தீர்க்க
அது பசித்தால்
பிஸ்கட் திங்கும் புலியாம்



பெருமழைக்கு பயந்த பெருச்சாளி
சமணகுகைக்குள் நுழைந்தது
மூலிகை வர்ணம் குழைத்து
வரையப்பட்ட நிர்வாண படங்களை பார்த்து
பெரும்பயம் கொண்டது பெருச்சாளி
ரப்பை பருத்த காவலர்
என் வண்டியை நிறுத்தி
தோசை ஏதேனும் இருக்கிறதாவென
சோதனை போடுகிறார்
அவரது சோதனையில்
என் கவிதைகள் சிக்காதிருக்கட்டும்
----------------------------------------




பற்பல பிறவிகள் வாங்க
பிக்பஜார் செல்ல
நான்ஓடத்தில் ஏறினேன்
ரவுண்டானாக்களை கடக்க
திராணியில்லாத அந்த ஓடத்தின்
வெளிச்சுவர்களில் போஸ்டர்கள் ஓட்டப்பட்டிருந்தது
பின் தொடர்ந்த ஆடுகள்
போஸ்டர்களைத் தின்றன
பிதாவே இவர்களை மன்னித்து
நன்றாக சமையுங்கள்




சிற்சில தவறுகள் செய்யுங்கள்
உபன்யாசகர் கெஞ்சிக் கேட்டுகொண்டார்
எவன் கேட்கிறான்
அவனவன் கையில் செல்போன்
அத்தனைபேரும் வேதவித்து

இன்னும் மிஞ்சியிருப்பது
இரண்டு ரொமாலி ரொட்டிகள்தான்
தொட்டுக்கொள்ள பஞ்சகவ்யமும்
தாகத்திற்கு இரண்டு நைல் ஷாம்பூ பாட்டில்களும்





உங்கள் குழந்தைகளுக்காக
கவலைகளை வாங்கி வைக்காதீர்கள்
மாறாக கவலைப்பட கற்றுக்கொடுங்கள்
பெருந்துன்பத்தின் வேர்களிலிருந்து
மூலிகை பெட்ரோல் கிடைக்கும்



அன்புத்தோழி ப்ரிவ்யூ ஷோவில்
காஸ்ட்ரோ குவிக்குவி விற்ற சுண்டலை
வாங்க எவனுக்கும்வக்கு இல்லை
ஜார்ஜ் புஸ்ஸூம் வந்திருந்தான்

சினிபிளெக்ஸ் தியேட்டர்களுக்குள்
அடைக்கப்பட்டிருக்கும் வெள்ளைப் பன்றிகள்
விடுதலையானதும்
நாம்பால்குக்கரை
அடுப்பிலிருந்து இறக்குவோம்

மனம் ஒரு குரங்கு
அதன் உடலெங்கும் சிரங்கு...
---------------------------------
பாதாள லோகத்தில் பானுப்ரியா

கசிந்து கொண்டிருந்த இசை
கயிற்றுக்கட்டில் மேல்
கட்டெறும்பாய் நகர்கையில்
குலுங்கி குலுங்கி அனைந்து போனது
தெருவிளக்குவெளிச்சம் இருந்த
வெளியெங்கும் இப்போது இசையை நிரப்பலாம்
அல்லது தோசையை திருப்பலாம்

அமெரிக்கா சென்ற அய்யோடியின் பிள்ளைகள்
அம்பரம்பாளையம் திரும்பி வந்த ஓரிரவில்
அய்யோடியின் கல்யாண வேட்டியில் ரத்தக்கறை
வயசுக்கு வந்திருப்பான்
அல்லது வத்தபொடி சிந்தியிருக்கும்

கடலைவாய்க்காரியை கலாய்க்கபின்
முன் நவீனத்துவம் போதவில்




அந்த நாள்
மோசமான நாள்
மைல் கணக்காய்
நடந்தேன் நான்
நானாக இல்லை நான்
புன்னகை எதையும்
திருப்பித்தர முடியவில்லை
சோர்ந்தேன்
பலவீனம்
பசி
ஆனாலும்
நான் திரும்பி
போகமாட்டேன்
சில நேரங்களில்
ஒரு டாக்ஸி கிடைப்பது சிரமம்
நீங்கள் கருப்பரெனில்!




வீடு இல்லை
பணம் இல்லை
பால் இல்லை
தேன் இல்லை

ஆனால்
இந்த நிலம் எங்களுடையது
கடலோடிப் போங்கள்
இந்த நிலம் எங்களுடையது!



முந்தாநாள் அடித்தகஞ்சாவால்
மிஞ்சிய கிறுகிறுப்பின்
எஞ்சிய வார்த்தைகளைப்பிடித்துக்கொண்டு
சரயு நதிக்கரையோரம் நீந்திக்கொண்டிருந்தேன்
என் சக்களத்தி செத்துவிட்டாள்
கலோக்கியல் நடையில்
கருமாதிசெய்ய வேண்டும் என
சதிசாவித்திரி கலங்கியபடி
வந்தபோது பீறிட்டெழுந்தது
ஓரு கப்ஸா கவிதை
பின்நவீனத்துவத்தின் உள்ளிடற்ற
கரிபீயன் கல்லறை தீவில்
கபோதி ஒருவன்
காம்போதி பாடுகிறான்
ஞானமெனும் பெருங்கழுதை
கடன் வாங்கி திரிவதை
எதிர்வந்த யானை ஏளனம் செய்தபோது
சத்தியமாய் அவள் செத்துவிட்டாள்!

No comments: