Wednesday, October 1, 2008

சமீபத்தில் படித்து ரசித்த கவிதைகள் ..........

உன் பிறந்தநாளன்று மட்டும்,

என் டைரி வெறுமையாய்

இருப்பது பார்த்து கோபிக்கிறாய்.

அது டைரியில் குறிக்க

வேண்டிய நாளில்லையடிஎன்

உயிரில் பொறிக்க வேண்டிய நாள்!

____________________________________

உன் பிறந்தநாளன்று முதலாளாய் 12

மணிக்கே

வாழ்த்தவில்லையென சண்டைக்கு வருகிறாய்

நீ பிறந்த நேரத்தில் வாழ்த்துவதற்காய் நான் காத்திருந்ததை

எப்படி சொல்லிப் புரிய வைப்பது?

____________________________________

ஒருநாளுக்காக ஓராண்டு காத்திருக்க முடியவில்லையடி.

உன் பிறந்தநாளை மாதம்தோறும்

இல்லையில்லை,நீ பிறந்தகிழமையென்று

வாரம் தோறும் கொண்டாடுவோமா?

____________________________________

நீ பிறந்த மருத்துவஅறைக்கு ராசிகூடிவிட்டதாம்.

அழகுக்குழந்தை பிறக்க அங்குதான்

பிரசவம் பார்க்கவேண்டுமென

அடம்பிடிக்கிறார்களாம் கர்ப்பிணி பெண்கள்.

____________________________________

உன் பெயரில் நடக்கும்

பிறந்தநாள் அர்ச்சனையை ஏற்றுக்கொள்ள

தவம் கிடக்கின்றன

எல்லாத் தெய்வங்களும்!

____________________________________

பிறக்கும்போது 3 கிலோ இருந்தாயாம்.

பத்து மாதமாய் உன் அம்மாவால்,

3 கிலோ அழகுதான் சேர்க்க முடிந்ததா?

____________________________________

உன் பிறந்த நாளை

தேவதைகள் தினமாய்க் கொண்டாட

தேவதைகளே தீர்மானித்திருப்பது

உனக்குத் தெரியுமா?

____________________________________

மழைக் காலம், கார்காலமெல்லாம்,

எந்த மாதமென்று எனக்குத் தெரியாது

நீ பிறந்த மாதம் அழகுக்காலம்!

____________________________________

கால எந்திரம் கிடைத்தால் நீ பிறந்தபொழுது,

நான் என்ன செய்து கொண்டிருந்தேன்?

எனப் பார்க்க ஆசை!

____________________________________

பிறந்தநாளை எப்போதும்

ஆங்கிலத் தேதியில் கொண்டாடுகிறாய்

என்ன பாவம் செய்தது, தமிழ் தேதி?

____________________________________

தன் சாதனைப் பட்டியலில்

உன் பிறப்பை முதன்மையாய்க்

குறித்து வைத்திருப்பான் பிரம்மன்!

____________________________________

பிறந்தநாளுக்கு

எத்தனை ஆடைகள் நீ எடுத்தாலும்

உன் ‘பிறந்தநாள் ஆடை’? போல் வருமா?

____________________________________

ஒருமுறைதான் பிறந்தாய்

உன்னைப் பார்க்கும்

ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன்!

____________________________________

நீ பிறந்த பிறகுதான்

உன் அப்பாவுக்கே பெயர் வைத்தார்களா?

அழகப்பன் என்று!

____________________________________

உன் பிறந்த நாளன்று

உன்னை வாழ்த்துவதா?

நீ பிறந்த நாளை வாழ்த்துவதா?

____________________________________

ஒவ்வொரு பிறந்த நாளிலும்

வயதோடு, அழகையும்

ஏற்றிக் கொள்கிறாய்!

____________________________________

உன் பிறப்பு

உன் தாய்க்குத் தாய்மையையும்,

எனக்கு வாழ்வையும் தந்தது!

____________________________________

நீ பிறந்தாய்…

பூமிக்கு இரண்டாம் நிலவு

கண்டுபிடிக்கப் பட்டது!

____________________________________

உன் பிறப்பில் தான்

கண்டுகொண்டேன்

கவிதைக்கும் உயிருண்டென!

____________________________________

என் காதல் தேசத்தில்

உன் பிறந்த நாள்

தேசிய விடுமுறை.

____________________________________

அழுகையோடு பிறந்தாயா?

அழகோடு பிறந்தாயா?....

____________________________________

("...............................")

____________________________________

( உன் வயதுக்கு ஒரு கவிதை கேட்டாய். ஒன்றே ஒன்று குறைகிறதடி. சரி உன் பெயரெழுதி நிரப்பிக்கொள்!)

No comments: